Thursday, October 15, 2020

ஆராய்ச்சி படிப்பு (Phd) படித்த நபரின் சாதகம்

 ஆராய்ச்சி படிப்பு படித்த நபரின் ஜாதகம் (Phd)


  செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  உயிரியல் துறையில் ஆராய்ச்சியாளர் பட்டம் பெற்ற நபரின் சாதகம்.


 இவரது 

லக்னம் -விருச்சிகம் 

ராசி -கடகம் 

நட்சத்திரம் -ஆயில்யம்


பிறந்த தேதி 19- 10-1984 பிறந்த நேரம்

காலை 10 மணி


                         



  இவரது ஜாதகத்தில் லக்னத்தில் தூண்களான திரிகோண ஸ்தானமான 1 ,5, 9ஆம் இடங்கள் வலுவடைந்துள்ளது. அதாவது லக்னாதிபதியான செவ்வாய் பகவான் தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் தனகாரகன் ஆன ஆட்சி பெற்ற குரு பகவானுடன் அமர்ந்து உள்ளது.

 குருபகவான் 2 மற்றும் 5 க்கு உரியவர் ஆவார்.

பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சந்திரன் ஆட்சி அடைந்துள்ளார் .

இவரது திரிகோண அதிபதிகளான குரு, சந்திரன், செவ்வாய் ஒன்றுக்கொன்று நட்புக் உரியவர் ஆவார்.


 இவரது ஜாதகத்தில் ஆரம்ப கல்வி ஸ்தானமான குருபகவான் ஆட்சி பெற்று, உயர்நிலைக் கல்வி தரக்கூடிய சனி பகவான் உச்சம் அடைந்து லக்னத்திற்கு 12ல் மறைந்து மறைமுக வலுப்பெற்று இருப்பதாலும், மேல்நிலைக் கல்வியை தரக்கூடிய ஒன்பதாம் இடமான சந்திர பகவான் ஆட்சி பெற்று அதுவும் சர ராசியாக இருப்பதால் சீனா போன்ற வெளிநாடு சென்று தனது ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்.


    ஜாதகத்தில் செவ்வாய் பகவான் குருபகவானால் சுபத்துவம் பெற்ற நிலையில் உயிரியல் சார்ந்த துறையில் தனது ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு உள்ளார்.


  ஒருவரது ஜாதகத்தில் மறைவிட ஸ்தானமான 8 மற்றும் 12ஆம் இடங்கள் சுபத்துவம் பெற்றால் வெளிநாட்டில் சென்று வசிக்க கூடிய நிலையை உருவாக்கும்.


 இவரது ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற குரு மற்றும் செவ்வாயின் எட்டாம் இடத்தினை பார்த்து சுபத்துவ படுத்தியதால் வெளிநாடு சென்று தனது ஆராய்ச்சி படிப்பை முடித்தார். ஆனால் அதே நேரத்தில் 12-ஆமிடம் பாவத்துவம் பெற்றதால் அவர் அங்கு நிலைத்திருக்க விரும்பவில்லை.அதாவது 12-ஆம் இடத்தில் சனி பகவான் உச்சம் மற்றும் சூரியன் நீசம்  ஆதலால் நீசபங்கம் பெற்று , சூரியன்+சனி சேர்க்கை பாபத் தன்மை பெற்று பாவ கிரகங்கள் புதன் உடன் சேரும் பொழுது பாவியாக மாறும் என்ற சூழலில் வேறு எந்தவித சுபத்துவ பார்வையும் அந்த ஸ்தானத்திற்கு கிடைக்காததால் அவரால் அங்கு தங்கி படிப்பு சார்ந்த வேலையை பார்க்க இயலவில்லை.

சொந்த ஊர் திரும்பி தனது படிப்பிற்கும் தொடர்பில்லாத வேறு வேலையை  நிழல் கிரகங்களான ராகு, கேது தொடர்பு பெற்ற சுக்கிரதசை பார்க்க வைத்துள்ளது.


 நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & டெலிகிராம்

    9715189647

        செல்

   9715189647

     7402570899


My website

 www.astroravichandransevvai.in


                   



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

அரசு ஆசிரியராக வேலை பார்க்கும் அமைப்பு

 அரசு ஆசிரியராக பணிபுரியும் நபரின் ஜாதகம்.


   செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை


பிறந்த தேதி

 16 -11-1980

பிறந்த நேரம்

காலை-6-10

பிறந்த இடம்: புதுக்கோட்டை


 லக்னம் -துலாம்

 ராசி- கும்பம்

பிறந்த நட்சத்திரம் -சதயம்


                  



   பொதுவாக இந்திய வேத ஜோதிட விதிப்படி ஒருவர் ஆசிரியராக அவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் போதிக்கும் தன்மையுடைய குரு பகவான் லக்கனம் மற்றும் ராசிக்கு வாக்கு ஸ்தானமான இரண்டாமிடம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.


  அதிலும் குறிப்பாக அரசு ஆசிரியராக திகழ வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியான சூரியனும் சுபத்துவ நிலையில் வலுப்பெற்று இருக்க வேண்டும்.


   மேற்கண்ட இரண்டு விதிகளையும் கீழ்க்கண்ட சாதகத்தில் காணப்படுவதால் இவருக்கு அரசு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.


 இவரது ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்திற்கு விய ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தை பார்வை செய்கிறது.


 மேலும் 

சிம்ம லக்கினத்தை வளர்பிறைச் சந்திரன் பார்வை செய்து சுபத்துவ படுத்தியுள்ளது. சிம்மத்திற்கு வேறு எந்தவிதமான பாவகிரகங்கள் தொடர்பு இல்லை.


  சிம்ம அதிபதியான சூரியன் பகவான் லக்கனத்தில் அமர்ந்து எவ்வித பாவ கிரக தொடர்பு இன்றி, வளர்பிறைச் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளதால் அரசு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647


   செல்

  9715189647

    7402570899


                   



  அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

My website

www.astroravichandransevvai.in

Friday, March 27, 2020

சாதகத்தில் குரு-+கேது சேர்க்கை

சாதகத்தில் குரு- கேது சேர்க்கை என்ன பலனை தரும் ?

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

பொதுவாக ஒரு ஜாதகத்தில் குரு -கேது சேர்க்கை ஆன்மீக வாழ்க்கையை தரும் . இக்கிரக சேர்க்கை எந்த இடத்தில் அமைந்துள்ளது? என்பதைப் பொருத்தும், எந்த கிரகங்கள் அதனை பார்க்கிறது என்பதைப் பொருத்தும் பலனில் மாறுபாடு ஏற்படலாம்.

   "வல்லரவு தனித்து நின்று மறையவனோடு இசைஞானி மறுவக்காணில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவனேன்று இயம்புவதற்க்கு ஏதுவாய் இருப்பான் போலும் "

அருஞ்சொற்பொருட்கள்:

வல்லரவு-ராகு
மறையவன் -குரு
இசைஞானி-கேது

  ஒரு ஜாதகத்தில் ராகு தனித்து நின்று குரு பகவான் உடன் கேது சேரும்பொழுது எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவனேன்று அதன் திசை நடக்கும் காலத்தில் இருப்பார் என்பது வேத ஞானிகள் உரைத்த வாக்கு என்ற மேற்கண்ட பாடல்.
 கூறுகிறது.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
  செல்
  9715189647
    7402570899

                        

   அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(Teacher & Astrologer)

சனி+கேது ,சனி+ராகு மற்றும் சனி+செவ்வாய் சேர்க்கை பலன் எப்படி?

ஒரு ஜாதகத்தில் சனி+ கேது சேர்க்கை ,
 சனி +ராகு மற்றும் சனி+செவ்வாய் சேர்க்கை
தரும் பலன்களை விளக்கம் தரவும்.?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
  சனி+கேது சேர்க்கை
   ஒரு ஜாதகத்தில்
 சனி+ கேது சேர்க்கையானது ஆன்மீக ஞானத்தை சாதகருக்கு வழங்குகிறது.மெல்ல, மெல்ல லொளகீக வாழ்விலிருந்து விடுபட்டு வாழ வழிவகை செய்கிறது.
  5,9 மற்றும் 12 ஆம் இடங்களில் இக்கிரக சேர்க்கையானது ஆன்மீக ஞானத்தை சாதகருக்கு வழங்குகிறது.
  மேற்கண்ட அமைப்பில் குரு பகவானுடைய பார்வை ஆன்மீகத்தை ஞானத்தை மிகுதி படுத்துகிறார்.
சனி+ராகு சேர்க்கை
  பொதுவாக சனி+ராகு சேர்க்கையானது எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அந்த ஸ்தானத்தை பாதிக்க செய்வதோடு ,அதற்கு ஏழாம் இடத்தினையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.

உதாரணமாக
   இக் கிரக சேர்க்கையானது  மணவாழ்க்கையுடன் தொடர்பு உடைய ஸ்தானங்களான 1,2,7,8 ஆம் இடங்களில் இடம்பெற்று இயற்கை சுப கிரக பார்வையின்றி இருப்பின் திருமண வாழ்வானது பாதிப்பு அடைகிறது.
   இயற்கை சுப கிரக பார்வையானது இப்பலனில் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றது.
  சனி+செவ்வாய் சேர்க்கை
 இக் கிரக சேர்க்கையானது இருக்கும் இடத்தினை விட பார்வை பெறும் இடத்தினை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கிறது.
உதாரணமாக
 லக்கினத்திலிருந்து சனி+செவ்வாய் ஏழாம் இடத்தினை பார்வை செய்யும் போது தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையில் பாதிப்பு உண்டாகிறது.
  இயற்கை சுப கிரக பார்வை இப்பலனில் மாற்றத்தை உண்டாக்கியது
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
 வாட்ஸ் அப்
    9715189647
    செல்
   9715189647
     7402570899
                       

 அன்புடன்
சோ.ப.ரவிச்சந்திரன்
   M.Sc,M.A,BEd
(Teacher & astro researcher)
x

Thursday, March 26, 2020

கொரோனோ வைரஸ்

கொரோனா வைரஸ் பரவ சோதிட அடிப்படையிலான விளக்கம் தரலாமா ?

                            

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 உலகினையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ்
 தற்பொழுது இந்தியாவினையும் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.
கொரோனோ வைரஸ் என்றால் என்ன ? இது எங்கு உற்பத்தியாகி எந்த நாடுகள் எல்லாம் பரவி வந்திருக்கிறது.இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்பதை அன்றாட சமூக ஊடகங்களின் வழியாக அனைவரும் அறிந்த உண்மைகளை விரிவாக விளக்கி உங்களது கால நேரத்தினை விரயமாக்காமல் ஜோதிட அடிப்படையிலான கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலுக்கான  ஒரு சில காரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என வந்துள்ளேன்.

 உலகளாவிய சோதிடத்தில் மகர வீடு இந்தியாவினை குறிக்கும்.

  இந்தியாவினை பொறுத்த வரை மகர வீட்டில் ஆட்சி பெற்று இருக்கும் இயற்கை பாவ கிரகமான சனி பகவானுடன் திருக்கணித முறைப்படி  23.03.2020 மற்றொரு இரத்த காரக் கிரகம் செவ்வாய் பகவான் உச்சம் பெற்று இணைந்த காலத்திலிருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தெற்று பாதிப்பு அதிகம் ஆகிவிட்டது.

  இந்த கிரகம் சேர்க்கையானது 30.03.2020 வரை  பீதியை கிளப்பி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கும்.

     30.03.2020 ல் தனுசு வீட்டில் இருக்கும் குரு பகவான் தனுசு வீட்டிலிருந்து மகர வீட்டிற்க்கு அதிசாரம் பெற்று இடம்பெயரும் காலங்களில் இரண்டு பாவ கிரகங்களுக்கு இடையே செல்லும் குரு பகவான் நீச பக்கம் பெற்று இரு பாவ கிரக தாக்கம் இப்பிரபஞ்சத்தில்  உக்கிரமாக விழாமல் சமன் செய்யும் வாய்ப்பு இருப்பதால் கொரோனோ  வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

 முற்றிலுமாக இந்நோய் தொற்றுவிலிருந்து விடுபட மகர வீட்டில் இருந்து உச்சம் பெற்ற நிலையில் உள்ள செவ்வாய் பகவான் 05.05.2020 மகர வீட்டில் இருந்து கும்ப வீட்டிற்கு இடம் பெயர்ந்த பின்பு இந்தியா இந்நோய் தொற்று பரவலிருந்து விடுபடும் வாய்ப்பு உள்ளது.

     2019 -ncov -என்று பெயரிடப்பட்ட இந்த கொரோனா வைரஸ் எதிலிருந்து பரவியது என அதன் மூலம் கண்டு பிடிக்க முடியவில்லை.

சீனாவில் வுஹானில் அசைவ உணவக கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கெடப்பட்ட உணவு பதார்த்தத்திலிருந்து பரவி இருக்கலாம் என சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

  கிரக சஞ்சார அடிப்படையில் உலகளாவிய சோதிடத்தில் சீன தேசத்தை குறிக்கும் விருச்சிகத்தில்  26.12.2019 ல்   செவ்வாய் பகவான் இடம்பெயர்ந்து தனது எட்டாவது பார்வையில் காற்று ராசியான மிதுனத்தில் உள்ள ராகுவினை பார்க்கும் காலத்தில் காற்று மூலம் குறிப்பிட்ட தூரத்தில் பரவக்கூடிய நோய் தொற்றான கொராணா வைரஸ் சீனாவில் முதன்முதலாக வுஹானில்  பரவ ஆரம்பித்தது.

  ஆதலால் மே மாத வாக்கில் இந்நோய் தொற்று பாதிப்பிலிருந்து இந்தியா விடுபட கட்டாயம் வாய்ப்பு உள்ளது.

 இந்நோய் தொற்று பரவ விடாமல் தடுக்க வழிவகைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.

  இந்நோய் காற்று மூலம் பரவாது என அறிவியல் விஞ்ஞானிகள் கூறினாலும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் அதாவது நாலடி தள்ளியே நிற்க வேண்டும்.

    காற்று மூலம் ஒரு குறிப்பிட்ட தூரம் பரவும் என்பதால்தான் ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் நாலடி தூரம் இடைவெளி விட்டு நிற்க சொல்கிறார்கள்

 அதுவரை நமது தமிழக முதல்வர் கூறியது போல் "விழித்திரு-தனித்து இரு-வீட்டில் இரு " ஆகிய ஒன்றே இந்நோய் தொற்றுவிலிருந்து விடுபடுவதற்கான தாரக மந்திரம் ஆகும்.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647
    செல்
 9715189647
   7402570899
                             
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

Tuesday, March 24, 2020

வித்தையில் வித்தகன் வாய்ப்பேச்சில் வல்லவன்

வித்தையில் வித்தகன், வாய்ப்பேச்சில் வல்லவன்.

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!

செய்யரெண்டில் சாமிநிற்க இலக்கினத்தில் நிறைந்து 
செழித்தமதி இருக்கப்பாக் கியத்தில்வெள்ளி மேவ
வெய்யசத்ருத் தானத்தில் இராகுஇருந் தாலும்
மிக்கலக்கி னாதிபனும் புதனுமே  கூடித்
துய்யகேந் திரகோணம் தன்னில்இருந் தாலும்
சொலும்உதயம் புதன் இருக்க சுவாமிபார்த் தாலும்
ஐயமில்லா வித்தையுளன் தனத்தில்மால் இருக்க
அதற்கிறைவன் கேந்திரிக்கில் வாசாலன் என்பார் "

--ஜாதக சிந்தாமணி

இரண்டாம் வீட்டில் இலக்கினாதிபதி அமர்ந்து இருக்க , லக்கினத்தில் பொளர்ணமி சந்திரன் வீற்றிருக்க, ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் நின்றிருக்க,ஆறில் ராகு பொருந்தி இருந்தாலும்,

 லக்கினாதிபதியும் ,புதனும் இணைந்து கேந்திர, திரிகோண. ஸ்தானங்களில் அமர்ந்து இருந்தாலும்,

லக்னத்தில் புதன் வீட்டில் வீற்றிருக்க, லக்னாதிபதி அந்த புதனை பார்வையிட்டிருந்தாலும்,
அந்த ஜாதகன் வித்தையில் (கலையில்) வல்லவனாவன்.

இரண்டாம் வீட்டில் புதன் அமர்ந்து இருக்க ,
இரண்டுக்குடையவன்  கேந்திர ஸ்தானங்களில் வீற்றிருந்தார் அந்த ஜாதகன் பேச்சு திறமையுடையவனாக திகழ்வார்.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647
     செல்
   9715189647
    7402570899
                      

 அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

சகடை யோகம்

சகடை யோகம்


செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!


  ஒருவரது சாதகத்தில் குருபகவானுக்கு 6,8,12 ல் சந்திரன் நிற்பின் சகடையோகம் ஆகும்.

இதேபோல சந்திர பகவானுக்கு 6,8,12 -லும் குருபகவான் நிற்க கூடாது.

 சகடையோகம் என்பது

         சகடை என்பது ஒருவித வாகனம் .இது சுற்றி வரும்போது சகடையின் சக்கரமானது ஏற்றமும்,இறக்கமுமாய் இருக்கும்.இதேபோல இவ்வித யோகத்தினை பெற்றவர்களது வாழ்க்கையும் ஏற்றமும்,இறக்கமமுமாய் வாழ்க்கை அமையும்.ஒரு விதமான நிலையான வாழ்க்கையினை பெறமுடியாது.

ஆதார பாடல்(ஜோதிட சிந்தாமணி )


 "யாரடா தம்பி கேளாய்

ஆசானுக்கு ஈராறு எட்டில்
பாரடா நிலவு நிற்க
பயனிலா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம்
குலப்புகழ் உற்றோர்
பெற்றோர் வேறடா
வெறுப்பர் துன்பம்
வேரூன்றும் வாழ்நாள்
 எல்லாம் "

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

     97 151 89 647
       
செல்
   740 257 08 99
    9715189647

     


     

   அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
    M.Sc, MA,BEd.

யோனி பொருத்தம்

  யோனி பொருத்தம்


 செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!  

   யோனி பொருத்தம் என்பது   தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்திய உறவு நிலை பற்றி அறிந்துகொள்ள உதவும் நட்சத்திர பொருத்தம் ஆகும் .

 தாம்பத்திய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை இவற்றை பற்றி அறிந்துகொள்ள உதவும் பொருத்தமாகும். ஆண் பெண் யோனி நிலைகளை மிருகங்களாக உருவகப்படுத்தி தாம்பத்திய உறவின் நிலைகளை அறிந்து கொள்ள உதவும் ஒரு அளவுகோலாகும் .

     ஒருவர் ஜாதகத்தில்  காம காரகன் செவ்வாயுடன், களத்திர காரகன் சுக்கிரன் உடனும் பாவிகளான சனி அல்லது அரவான ராகு சேர்ந்த அமைப்பு பெற்றவர்கள் அல்லது சுக்கிரன் ,செவ்வாய் சேர்ந்த அமைப்பு பெற்றவர்கள்.

   இவை மட்டுமல்லாமல் சுக்கிரன் செவ்வாய் சனி ராகு ஆகிய கிரகங்கள் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கின்ற நிலையாக இருப்பினும்,

 மேலும்  மனநிலைக்காரகன் சந்திரனும் பலம் இழந்த நிலையில் கட்டாயம் யோனிப் பொருத்தம் இல்லை எனில்  திருமணம் செய்யக்கூடாது.

(தங்களது சாதகப் பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)

 whatsapp
    97 151 89 647

     செல்
97 151 89 647
  740 257 08 99

                  


அன்புடன் 
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 
     எம்.எஸ்.சி , எம்.ஏ, பி.எட்