Thursday, March 26, 2020

கொரோனோ வைரஸ்

கொரோனா வைரஸ் பரவ சோதிட அடிப்படையிலான விளக்கம் தரலாமா ?

                            

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 உலகினையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ்
 தற்பொழுது இந்தியாவினையும் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.
கொரோனோ வைரஸ் என்றால் என்ன ? இது எங்கு உற்பத்தியாகி எந்த நாடுகள் எல்லாம் பரவி வந்திருக்கிறது.இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்பதை அன்றாட சமூக ஊடகங்களின் வழியாக அனைவரும் அறிந்த உண்மைகளை விரிவாக விளக்கி உங்களது கால நேரத்தினை விரயமாக்காமல் ஜோதிட அடிப்படையிலான கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலுக்கான  ஒரு சில காரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என வந்துள்ளேன்.

 உலகளாவிய சோதிடத்தில் மகர வீடு இந்தியாவினை குறிக்கும்.

  இந்தியாவினை பொறுத்த வரை மகர வீட்டில் ஆட்சி பெற்று இருக்கும் இயற்கை பாவ கிரகமான சனி பகவானுடன் திருக்கணித முறைப்படி  23.03.2020 மற்றொரு இரத்த காரக் கிரகம் செவ்வாய் பகவான் உச்சம் பெற்று இணைந்த காலத்திலிருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தெற்று பாதிப்பு அதிகம் ஆகிவிட்டது.

  இந்த கிரகம் சேர்க்கையானது 30.03.2020 வரை  பீதியை கிளப்பி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கும்.

     30.03.2020 ல் தனுசு வீட்டில் இருக்கும் குரு பகவான் தனுசு வீட்டிலிருந்து மகர வீட்டிற்க்கு அதிசாரம் பெற்று இடம்பெயரும் காலங்களில் இரண்டு பாவ கிரகங்களுக்கு இடையே செல்லும் குரு பகவான் நீச பக்கம் பெற்று இரு பாவ கிரக தாக்கம் இப்பிரபஞ்சத்தில்  உக்கிரமாக விழாமல் சமன் செய்யும் வாய்ப்பு இருப்பதால் கொரோனோ  வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

 முற்றிலுமாக இந்நோய் தொற்றுவிலிருந்து விடுபட மகர வீட்டில் இருந்து உச்சம் பெற்ற நிலையில் உள்ள செவ்வாய் பகவான் 05.05.2020 மகர வீட்டில் இருந்து கும்ப வீட்டிற்கு இடம் பெயர்ந்த பின்பு இந்தியா இந்நோய் தொற்று பரவலிருந்து விடுபடும் வாய்ப்பு உள்ளது.

     2019 -ncov -என்று பெயரிடப்பட்ட இந்த கொரோனா வைரஸ் எதிலிருந்து பரவியது என அதன் மூலம் கண்டு பிடிக்க முடியவில்லை.

சீனாவில் வுஹானில் அசைவ உணவக கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கெடப்பட்ட உணவு பதார்த்தத்திலிருந்து பரவி இருக்கலாம் என சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

  கிரக சஞ்சார அடிப்படையில் உலகளாவிய சோதிடத்தில் சீன தேசத்தை குறிக்கும் விருச்சிகத்தில்  26.12.2019 ல்   செவ்வாய் பகவான் இடம்பெயர்ந்து தனது எட்டாவது பார்வையில் காற்று ராசியான மிதுனத்தில் உள்ள ராகுவினை பார்க்கும் காலத்தில் காற்று மூலம் குறிப்பிட்ட தூரத்தில் பரவக்கூடிய நோய் தொற்றான கொராணா வைரஸ் சீனாவில் முதன்முதலாக வுஹானில்  பரவ ஆரம்பித்தது.

  ஆதலால் மே மாத வாக்கில் இந்நோய் தொற்று பாதிப்பிலிருந்து இந்தியா விடுபட கட்டாயம் வாய்ப்பு உள்ளது.

 இந்நோய் தொற்று பரவ விடாமல் தடுக்க வழிவகைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.

  இந்நோய் காற்று மூலம் பரவாது என அறிவியல் விஞ்ஞானிகள் கூறினாலும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் அதாவது நாலடி தள்ளியே நிற்க வேண்டும்.

    காற்று மூலம் ஒரு குறிப்பிட்ட தூரம் பரவும் என்பதால்தான் ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் நாலடி தூரம் இடைவெளி விட்டு நிற்க சொல்கிறார்கள்

 அதுவரை நமது தமிழக முதல்வர் கூறியது போல் "விழித்திரு-தனித்து இரு-வீட்டில் இரு " ஆகிய ஒன்றே இந்நோய் தொற்றுவிலிருந்து விடுபடுவதற்கான தாரக மந்திரம் ஆகும்.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647
    செல்
 9715189647
   7402570899
                             
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

No comments:

Post a Comment