Thursday, October 15, 2020

அரசு ஆசிரியராக வேலை பார்க்கும் அமைப்பு

 அரசு ஆசிரியராக பணிபுரியும் நபரின் ஜாதகம்.


   செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை


பிறந்த தேதி

 16 -11-1980

பிறந்த நேரம்

காலை-6-10

பிறந்த இடம்: புதுக்கோட்டை


 லக்னம் -துலாம்

 ராசி- கும்பம்

பிறந்த நட்சத்திரம் -சதயம்


                  



   பொதுவாக இந்திய வேத ஜோதிட விதிப்படி ஒருவர் ஆசிரியராக அவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் போதிக்கும் தன்மையுடைய குரு பகவான் லக்கனம் மற்றும் ராசிக்கு வாக்கு ஸ்தானமான இரண்டாமிடம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.


  அதிலும் குறிப்பாக அரசு ஆசிரியராக திகழ வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியான சூரியனும் சுபத்துவ நிலையில் வலுப்பெற்று இருக்க வேண்டும்.


   மேற்கண்ட இரண்டு விதிகளையும் கீழ்க்கண்ட சாதகத்தில் காணப்படுவதால் இவருக்கு அரசு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.


 இவரது ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்திற்கு விய ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தை பார்வை செய்கிறது.


 மேலும் 

சிம்ம லக்கினத்தை வளர்பிறைச் சந்திரன் பார்வை செய்து சுபத்துவ படுத்தியுள்ளது. சிம்மத்திற்கு வேறு எந்தவிதமான பாவகிரகங்கள் தொடர்பு இல்லை.


  சிம்ம அதிபதியான சூரியன் பகவான் லக்கனத்தில் அமர்ந்து எவ்வித பாவ கிரக தொடர்பு இன்றி, வளர்பிறைச் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளதால் அரசு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647


   செல்

  9715189647

    7402570899


                   



  அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

My website

www.astroravichandransevvai.in

No comments:

Post a Comment