Tuesday, March 24, 2020

வித்தையில் வித்தகன் வாய்ப்பேச்சில் வல்லவன்

வித்தையில் வித்தகன், வாய்ப்பேச்சில் வல்லவன்.

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!

செய்யரெண்டில் சாமிநிற்க இலக்கினத்தில் நிறைந்து 
செழித்தமதி இருக்கப்பாக் கியத்தில்வெள்ளி மேவ
வெய்யசத்ருத் தானத்தில் இராகுஇருந் தாலும்
மிக்கலக்கி னாதிபனும் புதனுமே  கூடித்
துய்யகேந் திரகோணம் தன்னில்இருந் தாலும்
சொலும்உதயம் புதன் இருக்க சுவாமிபார்த் தாலும்
ஐயமில்லா வித்தையுளன் தனத்தில்மால் இருக்க
அதற்கிறைவன் கேந்திரிக்கில் வாசாலன் என்பார் "

--ஜாதக சிந்தாமணி

இரண்டாம் வீட்டில் இலக்கினாதிபதி அமர்ந்து இருக்க , லக்கினத்தில் பொளர்ணமி சந்திரன் வீற்றிருக்க, ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் நின்றிருக்க,ஆறில் ராகு பொருந்தி இருந்தாலும்,

 லக்கினாதிபதியும் ,புதனும் இணைந்து கேந்திர, திரிகோண. ஸ்தானங்களில் அமர்ந்து இருந்தாலும்,

லக்னத்தில் புதன் வீட்டில் வீற்றிருக்க, லக்னாதிபதி அந்த புதனை பார்வையிட்டிருந்தாலும்,
அந்த ஜாதகன் வித்தையில் (கலையில்) வல்லவனாவன்.

இரண்டாம் வீட்டில் புதன் அமர்ந்து இருக்க ,
இரண்டுக்குடையவன்  கேந்திர ஸ்தானங்களில் வீற்றிருந்தார் அந்த ஜாதகன் பேச்சு திறமையுடையவனாக திகழ்வார்.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647
     செல்
   9715189647
    7402570899
                      

 அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment