Saturday, October 14, 2023

புதிய தொழில் தொடங்குவோர் கவனத்திற்கு..

 புதிய தொழில் தொடங்குவோர் கவனத்திற்கு...

      


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


      உங்கள் ஜாதகத்தில் தொழில் செய்வதற்கு உரிய அமைப்பு உள்ளதா ? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா ?  என்பதை ஜீவன ஸ்தானமான பத்தாம் இடம் , அதன் அதிபதி மற்றும் தொழில் செய்ய உகந்த காரக கிரகம் சூரியன் ஆகிய மூவரையும் நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலன்களுக்கு ஏற்ப  ஆராய்ந்து தொழில் செய்வதற்கு உரிய காலம் வந்து விட்டதா? என தொழில் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட ஜாதகரின் ஜாதகத்தை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் இடம், அதிபதி மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் நல்ல அமைப்பில் இருக்கும் போது தொழில் தொடங்கலாம்.


 இவ்வாறு ஆய்வு செய்து பார்க்கும் போது தொழில் செய்யும் அமைப்பு இருந்தால் என்ன தொழில் தொடங்கலாம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


  உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மை அடைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டுள்ளதோ அவை சார்ந்த தொழிலை நீங்கள் மேற்கொள்ளலாம்.


தொழில் தொடங்கும் போது ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதி தசை நடப்பில் இருக்கும் காலங்களில் அல்லது அவ யோக தசை நடக்கும் காலங்களில் அல்லது பாவத்துவ நிலையை அடைந்த தசையில் தொடங்க கூடாது.


 வளர்பிறை முகூர்த்த வேளையில் நல்ல சுப தன்மை அடைந்த சுப யோக தசையில் தொழில் தொடங்கலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment