Saturday, October 14, 2023

யார் மூலம் சொத்து சேரும் ?

 யார் மூலம் சொத்து சேரும்?




செவ்வாய்பட்டி ஸ்ரீ    அம்மன் துணை!


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்ற நிலையில் 

 வளர்பிறை சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உச்சம், ஆட்சி, கேந்திரம் மற்றும் கோணங்களில் இருந்து சுபர் பார்வை பெற்று இருந்தால் மெத்தையில் படுத்து உறங்கும் ஆடம்பர வீடுகள் உடையவராக இருப்பார்.தனவான் ஆகவும், நஞ்சை, புஞ்சை உடையவனாகவும் மற்றும் மன்னனுக்கு மன்னராக யோகம் படைத்தவராக இருப்பார்.இது போன்ற அமைப்பை கொண்டவன் தனது கடின உழைப்பால் முன்னேற கூடியவர்களாக திகழ்வார்.


மகர லக்கினத்தில் பிறந்து லக்கனத்தில் செவ்வாய் உச்சம் பெற்று கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று நின்று வளர்பிறை சந்திரன் ஆக இருப்பவர்கள் யோகம் படைத்தவராக இருப்பார்.


மீன லக்னம் லக்கனத்தில் சந்திரன், சிம்மத்தில் சூரியன் கும்பத்தில் ச னி, மகரத்தில் செவ்வாய் மற்றும் விருச்சிகத்தில் குரு பகவான் அமர்ந்துள்ள ஜாதகர் அரசனுக்கு நிகராக யோகம் படைத்தவராக இருப்பார்.


லக்கனாதிபதி ஐந்து மற்றும் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் யோகம்.


தனாதிபதி இரண்டாம் இட அதிபதி லாப ஸ்தானம் என்னும் 11ஆம் இடத்தில் இருந்தால் ஒரு மனிதன் தனது சுய உழைப்பால் முன்னேறி பணம் சேர்ப்பான்.


  தன மற்றும் சுக அதிபதி சேர்க்கை (2,4) தாயார் மூலம் தனம் சேரும்.


தன மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி (2,5) சேர்க்கை பெற்ற பிள்ளை மூலம் சொத்து சேரும்.


 சில நேரங்களில் சிலருக்கு எதிரி மூலமாக கூட சொத்து சேரும் வாய்ப்பு உண்டு.இதற்கான விதி ஆறாம் அதிபதி, செவ்வாய்,சனி ஆகிய இவர்களுடன் லக்கனாதிபதி சேர்ந்த நிலையில் உண்டாகும்.


 களத்திர ஸ்தானமான ஏழாம் இட அதிபதி 4,11 ஆம் இடத்தில் இருந்தால் அல்லது சுக்கிரன் நான்காம் இடத்தில் நின்று ஏழாம் இடத்தில் நின்று இருந்தால் மனைவி வழியில் சொத்து சேரும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்).


அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment