Monday, October 16, 2023

 கிரகங்கள் படுத்தும் பாடு.

    ஃ


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை ?


  மனித வாழ்வினை வழி நடத்தி செல்வதில் கிரகங்கள் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை தொடர்ந்து எழுதி வருகிறேன்.


  ஜாதகம் பார்க்க வரும் நீங்கள் கேட்கும் எந்த கேள்விகளுக்கு பலன் தர முதலில் கீழ் கண்ட மூன்று வகைகளில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.


  1) நீங்கள் கேட்கும் கேள்வி உடன் தொடர்பு கொண்ட ஸ்தானத்தை பார்க்க வேண்டும். அந்த ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருக்கிறதா? பாவ கிரகங்கள் இருக்கிறதா ? என்பதை கவனிக்க வேண்டும். இதே போல அந்த ஸ்தானத்தை சுப கிரகங்கள் பார்க்கிறதா? பாவ கிரகங்கள் பார்க்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

சுப கிரகங்கள் தொடர்பு அந்த ஸ்தானத்திற்கு 40 மதிப்பெண்ணையும், பாவ கிரகங்கள் தொடர்பு அந்த ஸ்தானத்தின் 40 மதிப்பெண்ணை தரவிடாமலும் செய்து விடவும்.


2) நீங்கள் கேட்கும் கேள்வியுடன் தொடர்புடைய ஸ்தான அதிபதி பாவ கிரகமா அல்லது சுப கிரகமா ,அந்த கிரகத்துடன் தொடர்பு கொண்ட கிரகம் எப்படிப்பட்டது .அந்த கிரகத்தின் ஸ்தான வலிமை, திருக்பலம் மற்றும் திக்பலம் போன்ற பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இந்த ஸ்தான அதிபதியுடைய வலிமை, சுபத்தன்மை மற்றும் பாவத்தன்மை ஆகிய இவற்றினை பொறுத்து 40 மதிப்பெண் இந்த இடத்திற்கு வழங்கப்படும்.


3) நீங்கள் கேட்கும் கேள்வி எந்த ஸ்தானத்தோடு தொடர்பு கொள்கிறதோ அந்த ஸ்தானத்திற்கு உரிய காரக கிரகத்தின் வலிமை ,சுபத்தன்மை மற்றும் பாவத்தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப 40 மதிப்பெண் வழங்கப்படுகிறது.


 மேற்கண்ட மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்த்து அந்த கேட்கக்கூடிய கேள்விக்குரிய மதிப்பெண் எடுக்கப்படுகிறது .அவர் பெரும் மதிப்பின் அடிப்படையிலேயே பலனும் வழங்கப்படுகிறது. இங்கு லக்கனாதிபதியின் வலிமையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


   பலன் வழங்கும்பொழுது நிறைவாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த சாதகர் கேட்ட கேள்வியோடு தொடர்புடைய கிரக தசை வருகிறதா? அல்லது வரவில்லையா? என்பதை பொறுத்து பலனின் தன்மை மாறுபடும் அந்த தசைவந்தால் ஒரு விதமான பலன், வராவிட்டால் ஒரு விதமான பலன் என்ற வகையில் பலன் அமையும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல் : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

கோச்சார பலனை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யலாமா?

 கோச்சார பலனை மட்டும் வைத்து கொண்டு திருமணம் செய்யலாமா?      



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில்  திருமணம் செய்ய உகந்த நேரம் எதுவென்று கணிப்பதற்கு வெறும் கோச்சார அடிப்படையில் உள்ள கிரக நிலைகளை மட்டுமே கொண்டு ஆய்வு செய்து திருமணம் செய்து விட கூடாது.


    தசா புக்தி நிலைகளே ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது .திருமணம் செய்வதற்கு உகந்த நேரம் என்ன ?  என்பதை கோச்சார அடிப்படையில் ஆன கிரக பெயர்ச்சிகள் ஒரளவு ஒத்துழைப்பு தருமே ஒழிய முற்றிலும் தசா புக்தி நிலைகளே ஒருவருக்கு திருமணம் செய்ய உகந்த வயதினை தீர்மானிக்கிறது என்று முடிவு செய்து விட முடியாது.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 

மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


 (தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

Saturday, October 14, 2023

புதிய தொழில் தொடங்குவோர் கவனத்திற்கு..

 புதிய தொழில் தொடங்குவோர் கவனத்திற்கு...

      


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


      உங்கள் ஜாதகத்தில் தொழில் செய்வதற்கு உரிய அமைப்பு உள்ளதா ? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா ?  என்பதை ஜீவன ஸ்தானமான பத்தாம் இடம் , அதன் அதிபதி மற்றும் தொழில் செய்ய உகந்த காரக கிரகம் சூரியன் ஆகிய மூவரையும் நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலன்களுக்கு ஏற்ப  ஆராய்ந்து தொழில் செய்வதற்கு உரிய காலம் வந்து விட்டதா? என தொழில் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட ஜாதகரின் ஜாதகத்தை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் இடம், அதிபதி மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் நல்ல அமைப்பில் இருக்கும் போது தொழில் தொடங்கலாம்.


 இவ்வாறு ஆய்வு செய்து பார்க்கும் போது தொழில் செய்யும் அமைப்பு இருந்தால் என்ன தொழில் தொடங்கலாம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


  உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மை அடைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டுள்ளதோ அவை சார்ந்த தொழிலை நீங்கள் மேற்கொள்ளலாம்.


தொழில் தொடங்கும் போது ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதி தசை நடப்பில் இருக்கும் காலங்களில் அல்லது அவ யோக தசை நடக்கும் காலங்களில் அல்லது பாவத்துவ நிலையை அடைந்த தசையில் தொடங்க கூடாது.


 வளர்பிறை முகூர்த்த வேளையில் நல்ல சுப தன்மை அடைந்த சுப யோக தசையில் தொழில் தொடங்கலாம்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

வழக்கறிஞர் (Lawer ஆகும் யோகம்.

 ஒரு சிறந்த வழக்கறிஞராக (Lawyer) சாதக அமைப்பு.



 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானும் மற்றும் சனி பகவானும் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாமிடம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ள வழக்கறிஞராக (Lawyer) வேலை பார்க்கும் யோகம் உண்டு.


  மேற்கண்ட விதியை மெய்பிக்கும் உதாரண ஜாதகம்.


பிறந்த தேதி

11.02.1981

     2.54 pm

லக்னம்- மிதுனம் 

ராசி- மேஷம்

நட்சத்திரம்- பரணி


  இவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து லக்கனத்திற்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தை குரு மற்றும் சனி ஆகிய இரண்டும் இணைந்து பார்த்து தொடர்புகொண்டு இருப்பதால் சிறந்த வழக்கறிஞராக செயல்படுகிறார்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப் & டெலிகிராம்

   9715189647

       செல்

  9715189647

    7402570899


My website

 www.astroravichandransevvai.in

யார் மூலம் சொத்து சேரும் ?

 யார் மூலம் சொத்து சேரும்?




செவ்வாய்பட்டி ஸ்ரீ    அம்மன் துணை!


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்ற நிலையில் 

 வளர்பிறை சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உச்சம், ஆட்சி, கேந்திரம் மற்றும் கோணங்களில் இருந்து சுபர் பார்வை பெற்று இருந்தால் மெத்தையில் படுத்து உறங்கும் ஆடம்பர வீடுகள் உடையவராக இருப்பார்.தனவான் ஆகவும், நஞ்சை, புஞ்சை உடையவனாகவும் மற்றும் மன்னனுக்கு மன்னராக யோகம் படைத்தவராக இருப்பார்.இது போன்ற அமைப்பை கொண்டவன் தனது கடின உழைப்பால் முன்னேற கூடியவர்களாக திகழ்வார்.


மகர லக்கினத்தில் பிறந்து லக்கனத்தில் செவ்வாய் உச்சம் பெற்று கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று நின்று வளர்பிறை சந்திரன் ஆக இருப்பவர்கள் யோகம் படைத்தவராக இருப்பார்.


மீன லக்னம் லக்கனத்தில் சந்திரன், சிம்மத்தில் சூரியன் கும்பத்தில் ச னி, மகரத்தில் செவ்வாய் மற்றும் விருச்சிகத்தில் குரு பகவான் அமர்ந்துள்ள ஜாதகர் அரசனுக்கு நிகராக யோகம் படைத்தவராக இருப்பார்.


லக்கனாதிபதி ஐந்து மற்றும் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் யோகம்.


தனாதிபதி இரண்டாம் இட அதிபதி லாப ஸ்தானம் என்னும் 11ஆம் இடத்தில் இருந்தால் ஒரு மனிதன் தனது சுய உழைப்பால் முன்னேறி பணம் சேர்ப்பான்.


  தன மற்றும் சுக அதிபதி சேர்க்கை (2,4) தாயார் மூலம் தனம் சேரும்.


தன மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி (2,5) சேர்க்கை பெற்ற பிள்ளை மூலம் சொத்து சேரும்.


 சில நேரங்களில் சிலருக்கு எதிரி மூலமாக கூட சொத்து சேரும் வாய்ப்பு உண்டு.இதற்கான விதி ஆறாம் அதிபதி, செவ்வாய்,சனி ஆகிய இவர்களுடன் லக்கனாதிபதி சேர்ந்த நிலையில் உண்டாகும்.


 களத்திர ஸ்தானமான ஏழாம் இட அதிபதி 4,11 ஆம் இடத்தில் இருந்தால் அல்லது சுக்கிரன் நான்காம் இடத்தில் நின்று ஏழாம் இடத்தில் நின்று இருந்தால் மனைவி வழியில் சொத்து சேரும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்).


அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

வரவை விட செலவு அதிகமாக காரணம் என்ன?

 வரவை விட செலவு அதிகமாக காரணம் என்ன?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் வரவை விட செலவு அதிகமாகி விட காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால்  ஜாதகரின் தன ஸ்தானமான இரண்டாம் இடம், அதன் அதிபதி மற்றும் தன காரகன் குரு பகவான் ஆகிய மூன்றும் பலவீனம் அடைந்து இருக்கும் போது அல்லது விராயாதிபதி தசை நடக்கும் காலங்களில் அல்லது கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி நடக்கும் காலங்களில் அல்லது அவயோக தசை நடக்கும் காலங்களில் எவ்வளவு வருமானம் வந்தாலும் லரவை விட செலவு அதிகமாகி கஷ்டமான சூழ்நிலையில் ஜாதகரை இருக்க வைக்கும்.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்